Wednesday, November 18, 2009

வாசகன்

ஒரு புதிய
புத்தகத்தை தீண்டும்
வாசகனாகிறேன் – நான்
உன்னை எண்ணிய
கணங்களிலெல்லாம்…

பூ மாரி

பூ மாரி பொழியுது
என்பார்கள் எங்கள் ஊரில்
புரியவில்லை எனக்கு - அது
அப்போது!
புரிந்து கொண்டேன்
எதிர்காற்றில் எங்கள்
மகிழ்வுந்தின் மீது
மழைச்சாரல் அடிக்கையில் - இப்போது..!

Wednesday, November 4, 2009

கானல் தேடல்

அந்தி மழையில்
அங்கமெல்லாம்
நனைந்து - உன்னைத்தேடி
ஓடிவந்தேன் நம் வீட்டினுள்
உன் முந்தானைத்
துவாலையில் - என்
தலை துவட்ட...
கதவைத் திறந்தபோது - தான்
உறைத்தது...
தலைப்பிரசவம் முடித்து
தாய் வீட்டில் - நீ
இருக்கிறாய் என்று!