Monday, October 8, 2018

நீ இல்லாத உலகத்திலே

களிநயம் மிக்க
கவிதையும் வெற்றுச் சொல்தான் - நீ
இல்லாத உலகத்திலே...!
காலதர் வழிப்
புறாக்களின் காதலும்
சாலைகளில் இறைந்து கிடக்கும் ஊர்திகளும்
ஒன்று போலத்தான் - நீ
இல்லாத உலகத்திலே...!
தேனினும் இனிய
சுவைகொண்ட பண்டங்களும்
கசந்தே சுவைக்கும்
உன் உமிழ்நீரிறங்காத - என்
அடிநாக்கில் - நீ
இல்லாத உலகத்திலே...!
மனதை மயக்கும் இசையும்
இறைச்சலாய்த்தான் - என் செவிபுகுந்தோடும் - நீ இல்லாத உலகத்திலே...!
ஆயிரம் சொந்தங்கள்
அரவணைக்க வந்தாலும்
யாருமற்ற தனிமைக்
குழந்தைபோலொரு வெறுமை வந்து வந்து
போகும் - நீ
இல்லாத உலகத்திலே...!

No comments: