Wednesday, November 4, 2009

கானல் தேடல்

அந்தி மழையில்
அங்கமெல்லாம்
நனைந்து - உன்னைத்தேடி
ஓடிவந்தேன் நம் வீட்டினுள்
உன் முந்தானைத்
துவாலையில் - என்
தலை துவட்ட...
கதவைத் திறந்தபோது - தான்
உறைத்தது...
தலைப்பிரசவம் முடித்து
தாய் வீட்டில் - நீ
இருக்கிறாய் என்று!

No comments: