Sunday, August 5, 2018

Pancha Boothangal

பூமி தொட்டவுடன் - நம்
பசிபோக்க அன்னை
தரும் பாலும் - நீர்...!
மகிழ்ச்சி, தூக்கம்
எது வரினும் - நம்
கண்கள் வடிப்பதும் நீர்..!
நம் முதலும் நீர்..!
முடிவும் நீர்...!
பிறக்கும் பச்சைக்
குழந்தையையும் தாங்குகிறது...!
குழிதோண்டி தன்னைத்
துன்புறுத்துவோரையும்
தாங்குகிறது..!
புல், பூண்டிலிருந்து
வானளாவிய கட்டிடங்கள்
வரையில் மௌனமாய்த்
தாங்குகிறது...!
அது மட்டுமா?
இத்தனையையும் தாங்கிக்கொண்டு
தன் நேர்பாதையை
மாற்றாமல் அமைதியாய்
ஆதவனைச் சுற்றுகிறது...!
வேண்டும்போது மழையும் வெயிலும்
மாறி மாறிக் கொடுத்து
மனிதனை மகிழ்வித்து
என் கடன் பணி
செய்து கிடப்பதே
என உதவுகிறது...!
நமக்குத் தேவையான
ஆக்சிஜனையும் கொடுத்து
நாம் வெளியிடும்
கொடூர மாசுகளையும் ஏற்று
அமைதியாய் உலவுகிறது..!
வீட்டிற்கு விளக்கேற்றவும்
பிணத்திற்குக் கொள்ளி போடவும்
ஆதி முதல் அந்தம் வரை உதவி
உன்னதமடைந்த அதிசயப் பிறவி..!
கொஞ்சம் சிந்தியுங்கள்...!
அற்ப மனிதர்கள் - நாம்
இவர்களை இவ்வாறு
துன்புறுத்தினால்
இவர்கள் பொங்கியெழுந்தால்..?

No comments: