Tuesday, December 30, 2008

காதல்...

காதலுக்கு
கண்கள் மட்டும் இல்லை கண்ணே...
அறிவும் கூடக் கிடையாது!
பைத்தியமாவதிலும்
சுகமானதுதான் காதல்!

Monday, December 29, 2008

ஆறுதல்

ஜலதோஷம்
உடல் ஒத்துழைக்கவில்லை...
உன் மடி தேடுகிறேன்
உடனடியாகக் கிடைக்காது
எனத் தெரிந்தும்!

Sunday, December 28, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ஒரு வருடம்
நீ பிறந்தாய்
பல வருடங்கள்
அதைக் கொண்டாடினாய்
பல சொந்த பந்தங்களுடன்...
இந்த வருடமும்
கொண்டாடுகிறாய்...
உனக்கே உனக்கான
என்னுடன் - முழுவதும்
புதிதாக!

Thursday, December 25, 2008

அத்தைகள்...

உன் அன்னையை - நான்
அழைக்கவில்லை அத்தை என்று..
அதற்காக, என் அன்னையை - நீ
வரவேற்கக் கூடத்
தயாரில்லை என்பது?

Wednesday, December 24, 2008

நீ கவிதை எனக்கு

தினம் ஒரு
கவிதை உன்னைப்பற்றி
எழுதலாம் என எண்ணுவேன்...
ஆனால்,
அடுத்த கணமே - அந்த
எண்ணம் எனக்கு
மறைந்துவிடும் - ஒரு
கவிதையைப் பற்றியே
கவிதை எழுதுவதா என்று...

Sunday, December 21, 2008

நீயின்றி நானில்லை

இந்த ஆறு மாத
வாழ்க்கையில்
என்னை நீ புரிந்து
கொண்டது எவ்வளவு?
என்றாய்..
அதை எண்ணிப்பார்க்கத்
தெரியவில்லை எனக்கு - உன்னைப்
பிரித்து புரிவது எதற்கு?
என் உடலில்
உயிராய் நீ இருக்கையில்...

Saturday, December 20, 2008

எனக்குள் நீ

நீ என்னிடம்
பேசுகிற தோரணையிலேயே
உன் உணர்வுகளை
என் உடலிலும்
மனதிலும் இறக்கிவிட்டுவிடுகிறாய்...
என்ன மாயமோ?

தவிப்பு

இன்று உன்னிடம் பேசும்வரை
பேச மாட்டேனா என்று தவித்தேன்...
பேசிய பிறகோ மீண்டும் பேச
நாளை வரை காத்திருக்க
வேண்டுமே என்று துடிக்கிறேன்...

Thursday, December 18, 2008

காதல்

உன் வீட்டுக் கணினியில்
இணையத்தளம் வருமெனக்
கேட்டதிலிருந்து உன்
குறுஞ் செய்தி வாராதா?
என ஏங்கிக் கொண்டிருக்கிருக்கிறேன்
உன் இரவில் நீ தூங்கிக்கொண்டிருப்பாய்
என்பது கூட நினைவில் இல்லாமல்...

Monday, December 15, 2008

இந்திய மனம்

எல்லாமே மலிவாய்க்
கிடைக்கிறது - டாலரில்!
எகிறுகிறது இதயம்
எண்ணிப் பார்க்கையில் - ரூபாயில்!

தாய்மை

பெண்ணின் தாய்மைக்கு
பிள்ளை சுமப்பதே - சுகம்
ஆணின் தாய்மைக்கு - தன்
பிள்ளையின் நினைவே சுகம்....

Friday, December 12, 2008

விலகி இருத்தலின் வலி

விடிகின்ற பொழுதில் - என்
விழிகள் தேடும் உன்
உருவம்
விழுந்த பொழுதில் - என்
உடல் நாடும்
உன் வெம்மை
சில மணித்துளிகள் கழிந்த
பிறகே தெரியும்
நம் இருவருக்கும்
இடையில் எவ்வளவு
தொலைவு எனும் உண்மை...!

Sunday, March 23, 2008

வாழ்க்கை

எந்தப் பேருந்தும்
எல்லாப் பயணத்திலும்
நிரம்பி வழிவதற்கும்
காலியாக இருப்பதற்கும்
உத்திரவாதமில்லை!
அதுபோலத்தான் - நம்
வாழ்க்கையும்!