Thursday, December 31, 2009

௨௦௧௦ புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும்

மகிழ்ச்சியாக எந்தப்

போராட்டத்தையும் எதிர்கொண்டு

தோல்வியையும் துரத்திவிட்டு

எந்தத் துக்கத்திலும்

துவளாமல் துடிப்போடு

இருப்போம் என்ற

உறுதி பூண்டு

நம் வாழ்வில்

இன்னோர் ஆண்டில்

இன்றொரு அடி வைப்போம்...

வாருங்கள் நண்பர்களே...

இந்த ௨௦௧௦ மட்டும் அல்ல

இனி வரும் எந்த ஆண்டும்

நமக்காக ஒரு கதவு

திறக்கும்...!

Wednesday, November 18, 2009

வாசகன்

ஒரு புதிய
புத்தகத்தை தீண்டும்
வாசகனாகிறேன் – நான்
உன்னை எண்ணிய
கணங்களிலெல்லாம்…

பூ மாரி

பூ மாரி பொழியுது
என்பார்கள் எங்கள் ஊரில்
புரியவில்லை எனக்கு - அது
அப்போது!
புரிந்து கொண்டேன்
எதிர்காற்றில் எங்கள்
மகிழ்வுந்தின் மீது
மழைச்சாரல் அடிக்கையில் - இப்போது..!

Wednesday, November 4, 2009

கானல் தேடல்

அந்தி மழையில்
அங்கமெல்லாம்
நனைந்து - உன்னைத்தேடி
ஓடிவந்தேன் நம் வீட்டினுள்
உன் முந்தானைத்
துவாலையில் - என்
தலை துவட்ட...
கதவைத் திறந்தபோது - தான்
உறைத்தது...
தலைப்பிரசவம் முடித்து
தாய் வீட்டில் - நீ
இருக்கிறாய் என்று!

Sunday, January 25, 2009

பயணம்

பணி முடிந்தது
பறக்கிறேன்
கூட்டைத் தேடி...

Friday, January 9, 2009

மத்தள மனம்...

சொந்தங்கள் அழைக்கின்றன
பொறுப்புகள் தடுக்கின்றன
போனால் பரவாயில்லை...
உயிரே கூட!

Saturday, January 3, 2009

எண்(ன்) ராசி...

எல்லா 7-ம் எண்
காரர்களைப் போலவே
என் வாழ்வும் இருக்கும்
என நம்பினேன்...
பொய்த்து விடும் போலிருக்கிறது...

துன்பம்

ஏன் எல்லோரும்
என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?
என்றாய்...
சற்றே சிந்தனை செய்...
உனக்கே புரியும்
உன்னைத் துன்புறுத்துவது
யார் அல்லது எதுவென்பது!