Saturday, December 29, 2018

இளையவன்
நீயென் உச்சி முகர்ந்த
வேளையில் நனைந்தது - என்
நெற்றியாயினும் ஞெகிழ்ந்ததென்னவோ
என் நெஞ்சம்தான்...!

Monday, October 8, 2018

நீ இல்லாத உலகத்திலே

களிநயம் மிக்க
கவிதையும் வெற்றுச் சொல்தான் - நீ
இல்லாத உலகத்திலே...!
காலதர் வழிப்
புறாக்களின் காதலும்
சாலைகளில் இறைந்து கிடக்கும் ஊர்திகளும்
ஒன்று போலத்தான் - நீ
இல்லாத உலகத்திலே...!
தேனினும் இனிய
சுவைகொண்ட பண்டங்களும்
கசந்தே சுவைக்கும்
உன் உமிழ்நீரிறங்காத - என்
அடிநாக்கில் - நீ
இல்லாத உலகத்திலே...!
மனதை மயக்கும் இசையும்
இறைச்சலாய்த்தான் - என் செவிபுகுந்தோடும் - நீ இல்லாத உலகத்திலே...!
ஆயிரம் சொந்தங்கள்
அரவணைக்க வந்தாலும்
யாருமற்ற தனிமைக்
குழந்தைபோலொரு வெறுமை வந்து வந்து
போகும் - நீ
இல்லாத உலகத்திலே...!

Tuesday, August 14, 2018

எரிகின்ற தீயில்
எண்ணெய்யை விட்டாற்போல்
கணிணி பார்த்துக்
கனன்ற - என்
கண்ணில் குத்தூசியாய்
வந்திரங்கியது
எதிர்ச்சாரல் மழை - இன்று..!

Thursday, August 9, 2018

மதுவும் இதழும்
போதையென்று
பாடியோர்க்குத் தெரியுமா
மழலைப் புன்னகை தான்
அதனினும் பெரிய போதையென்று?

Sunday, August 5, 2018

Pancha Boothangal

பூமி தொட்டவுடன் - நம்
பசிபோக்க அன்னை
தரும் பாலும் - நீர்...!
மகிழ்ச்சி, தூக்கம்
எது வரினும் - நம்
கண்கள் வடிப்பதும் நீர்..!
நம் முதலும் நீர்..!
முடிவும் நீர்...!
பிறக்கும் பச்சைக்
குழந்தையையும் தாங்குகிறது...!
குழிதோண்டி தன்னைத்
துன்புறுத்துவோரையும்
தாங்குகிறது..!
புல், பூண்டிலிருந்து
வானளாவிய கட்டிடங்கள்
வரையில் மௌனமாய்த்
தாங்குகிறது...!
அது மட்டுமா?
இத்தனையையும் தாங்கிக்கொண்டு
தன் நேர்பாதையை
மாற்றாமல் அமைதியாய்
ஆதவனைச் சுற்றுகிறது...!
வேண்டும்போது மழையும் வெயிலும்
மாறி மாறிக் கொடுத்து
மனிதனை மகிழ்வித்து
என் கடன் பணி
செய்து கிடப்பதே
என உதவுகிறது...!
நமக்குத் தேவையான
ஆக்சிஜனையும் கொடுத்து
நாம் வெளியிடும்
கொடூர மாசுகளையும் ஏற்று
அமைதியாய் உலவுகிறது..!
வீட்டிற்கு விளக்கேற்றவும்
பிணத்திற்குக் கொள்ளி போடவும்
ஆதி முதல் அந்தம் வரை உதவி
உன்னதமடைந்த அதிசயப் பிறவி..!
கொஞ்சம் சிந்தியுங்கள்...!
அற்ப மனிதர்கள் - நாம்
இவர்களை இவ்வாறு
துன்புறுத்தினால்
இவர்கள் பொங்கியெழுந்தால்..?

Wednesday, August 1, 2018

யாருமற்ற தனிமையை
ஒரு பொன்மாலைப்
பொழுதில் கழிக்க
எனக்குக் கிடைத்த
வரம் - மொட்டை மாடியில்
இளஞ்சூரிய ஒளியில்
வாசிக்கும் நூல்களே...!
வெந்து தணிந்தது காடு
என்று எழுதினான் பாரதி - அன்று...!
தணியாமலே வேகிறது என் வீடு - இன்று...!