உன் நளினத்தில் மயங்கி வாழ்த்த விழைந்தேன் - என் குரலெட்டும் தொலைவில் - நீ இருந்தும் அழைக்க மனமின்றி பரிதவித்து வந்தே விட்டேன் - நான்...! மன்னிப்பாயா பேதைப் பெண்ணே?
மழலையும் முதுமையும் ஒன்றுதான் எலும்பும் தோலும் போர்த்திய உடலில்...! மழலையும் முதுமையும் ஒன்றுதான் கேட்போர்க்குப் புரியாமல் பேசும் பற்களற்ற வாயில்...! மழலையும் முதுமையும் ஒன்றுதான் தன்னிலை மறந்து தவிக்கும் தனிமையில்...!