Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்!

விவசாயம் மட்டுமே
தொழிலாய்ப் பார்த்த - நம்
முன்னோர்கள் - உழவுத்
தொழிலுக்கு உதவிய
கதிரவனுக்குக் காணும்
பொங்கலாய் - தை முதல்
நாளில் மங்கள மஞ்சள்
சூழ - கற்கண்டினும் இனிய
கருங்ககரும்பும் - தன்
அடி முதல் நுனி வரை
உதவும் வாழையையும்
வைத்து
அறுவடை செய்த புது அரிசி
குத்தி - மார்கழி கோலத்தில்
மணந்த சாணமும் பூசணியும்
இட்டு - அதிகாலை நேரத்தில்
ஆதவனை உள்ளம் குளிர்வித்து
துயில் எழுப்பி - அவன்
இன்முகம் நோக்கி மகிழ்ந்து
இரண்டாம் நாளில் - ஏர் சுமந்து
விதை விதைத்த எருதுகளை
குளிப்பாட்டி புது வண்ணம் இட்டு
பொங்கல் ஊட்டி துள்ளி திரிய
வைத்து
மூன்றாம் நாளில் - முந்தைய
தினங்களின் சோர்வு நீங்க
உறங்கி ஊர் சுற்றி
காளையர் கன்னியர்
கண் நோக்கி காதல்
கொண்டு பூப்பறிக்கும்
திருவிழா பார்த்து மகிழ
வைத்த திருவிழாவை
இன்று நாம் இணையத்தில்
மட்டும் வைத்து
இதயத்தில் இருந்து தொலைத்து
நாமும் கொண்டாடுகிறோம்
தமிழர் திருநாள்..! - அந்த
வரையில் நாம் இன்னும்
தமிழர்கள் தான்...!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..!

No comments: