Tuesday, January 26, 2010

குடியரசைக் கொண்டாடுவோம்...!

பட்டம் படிக்கும்
காலத்திருந்தே எனக்குள்
ஓர் போராட்டம்
என் நாட்டிற்கு
ஏதேனும் நல்லது
செய்ய வேண்டும் - என்று!
என்ன செய்யலாம்? - என்
நாட்டைச் சுத்தப்படுத்தலாமா?
ஊழல் இல்லாத ஒன்றாய்...
என நினைத்தேன் - அது
நம் வேலையுமல்ல
நம்மால் இயலுவதுமல்ல
எனத் தெரிந்து - இனிவரும்
சுதந்திர, குடியரசு
தினங்களிலும்
இரத்த தானம் செய்வோம்
என சிந்தித்தேன்...
என் போறாதகாலம்
கல்லூரியை நான்விடும்
முன்பே புகையும் மதுவும்
புகுந்துகொண்டன என்னுள்
திருமணம் வரையில்
புகையை நான் விட்டேன்
புகை என்னை விடவில்லை
திருமணத்திற்குப் பின்பும்
மது மயக்குகிறது...
இன்றும் சுத்தமாய்த்தான்
யோசிக்கிறேன்
அமெரிக்காவில்...!
வெட்கக்கேடு - நானும்
ஓர் இந்தியன்!

No comments: