Sunday, November 5, 2017

அடடா அவள் தேவதை

செதுக்கி வைத்த
சிலையாய் உடலுமில்லை...!
மடிப்புக் குறையா
உடையுமில்லை...!
மந்தகாசப்
புன்னகையுமில்லை...!
நுணி நாக்கில்
ஆங்கிலமில்லை....!
சுங்கிடிச் சேலையில்
சிந்திய வேர்வையில்
சந்தமாய்ப் பாடி
வேப்பமரக் கிளையில்
தூளியிட்டு
கைக்குழந்தையைத்
தூங்கவைத்துக்
கழனியில் நடவு நட்டு
அந்தியில் வீடுதிரும்பும் - அவள்
ஒரு தேவதைதான்....!

No comments: