Sunday, November 5, 2017

தும்பை

நான் போருக்குப்
போகிறேனென்று
சொல்லாமல் சொல்லிச்
செல்ல சங்ககால
மன்னர்க்கெல்லாம்
உதவிய மலர் கொண்ட செடி....!

என் பதின் பருவத்தில்
இம் மலரின்
மது மயக்கத்தில்
கிறங்கிக் கிடக்கும் - வண்ணத்துப்பூச்சி
என்ற அறிவியலாற்றலோடு
அதை வேட்டையாடிப்
பட்டினும் மெல்லிய
அதன் இறகைத்
தொட்ட கணத்தில் - என்
விரல்களில் ஒட்டிய
வண்ணத்தைப்
பார்த்த பேருவகை
திரும்பிப் பார்க்கிறதென் மனதில்....!

No comments: