Sunday, November 5, 2017

பொங்கல்

கழனியில்
கதிர்த்தொழில்
புரியக் கைகொடுக்கும்
கதிரவனை வணங்கிக்
கலப்பையில் கட்டுண்டு
கைச்சாட்டைச் சுழற்றலுக்கடங்கிக்
கீறிட்டு விதைநெல்லை
பூமாதேவியின் கருவறையிலிட்டு
விருத்தி செய்ய
உதவிடும் காளைகளைச்
சீராட்டிக் கொண்டாடி
மனதிற்கினிய
மங்கையைக்
கண்டு காமுற்றுக்
கைத்தலம் பற்றிடவும்
உழவும் உறவும்
மேம்பட உண்டான
தைத்திருநாட்கள் வாழ்த்துக்கள்...!

No comments: